சங்கரன்கோவில் அருகே ஒருவர் அடித்து கொலை, மர்ம நபர்கள் வெறிச் செயல்

சங்கரன்கோவில் அருகே ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். வெறிச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2021-03-27 12:30 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆவுடையாபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தமிழன் தற்போது பாட்டத்தூர் பகுதியில் தனது மகன் மகள்களுடன் வசித்து வருகிறார்

இவர் மீது அடிதடி கட்ட பஞ்சாயத்து உட்பட 40 க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள. இந்நிலையில் நேற்று உறவினர் விட்டுக்கு சென்£ர்.

வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருநெல்வேலி சங்கரன்கோவில் சாலையில் அவர் வரும் போது மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதே இடத்தில் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

தகவல் அறிந்து வந்த சின்ன கோவிலங்குளம் காவல் துறையினர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News