சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்தல்: ஒருவர் கைது

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபானங்கள் கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-18 06:00 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் காளி (65) மாடசாமி (45). இவர்கள் இருவரும் கரிவலம் வந்த நல்லூர் அரசு மதுபான கடையில் சங்குபுரத்தில் விற்பனை செய்வதற்காக 24 மது பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கடத்தினர்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் காளி, மாடசாமி ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது மாடசாமி போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.

இது குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு முதியவர் காளியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும், 24 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News