குருவிகுளம் பகுதியில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு

குருவிகுளம் பகுதியில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2021-10-07 00:45 GMT

குருவிகுளம் பகுதியில், பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது குருவிகுளம் ஒன்றியம். இங்கு உள்ளாட்சித் தேர்தலில்  அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராக அமுதா_பாலசுப்பிரமணியம் போட்டியிடுகிறார். குருவிகுளம் 7வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் ஐஸ்வர்யா_வாசுதேவன் ஆகியோர், இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக, இளையரசனேந்தல் கிராம மக்களிடம், முன்னாள் ஆதிதிராவிடர்_மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரும் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளருமான, ராஜலட்சுமி, வாக்கு சேகரித்தார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News