கொடிகாத்த குமரனின் 118வது பிறந்தநாள்: சங்கரன்கோவிலில் வைகோ மாலை அணிவித்து மரியாதை

சங்கரன்கோவிலில் கொடிகாத்த குமரனின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை.

Update: 2021-10-04 09:30 GMT

சங்கரன்கோவிலில் கொடிகாத்த குமரனின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சங்கரன்கோவிலில் விடுதலை போராட்ட வீரரும் கொடிகாத்த குமரனின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குமரன் போன்றே நாட்டுக்கு உழைக்கவும் போராடவும் இளைஞர் முன்வர வேண்டும் என வைகோ பேச்சு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுதந்திர போராட்ட வீரரும் கொடிகாத்த குமரனின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் திருப்பூர் குமரனின் புகழ் எடுத்துரைத்தார். அப்போது கொடிகாத்தகுமரன் போல் நாட்டுக்காக உழைக்கவும் போராடவும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார். இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா குமரனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கலந்து கொண்டார்.

Tags:    

Similar News