சுகாதார அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Update: 2021-04-18 05:45 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் இடம் மாற்றபடுவதை கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சி சார்பில் தேரடி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் கடந்த 31 ஆண்டுகளாக 10 ஒன்றியங்களுக்கு தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் தென்காசி உதயமான பின்பு மாவட்ட தலைமை இடத்திற்கு மாற்றம் செய்யபட உள்ளதாகவும்,தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நேரத்தில் அவசர அவசரமாக இடம் மாற்றம் செய்படுதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சங்கரன்கோவில் தேரடி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மதாசார்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags:    

Similar News