சங்கரன்கோவிலில் தீயணைப்புத்துறையினர் வெள்ள மீட்பு விழிப்புணர்வு

சங்கரன்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புனர்வு ஏற்ப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-11-10 09:30 GMT

சங்கரன்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புனர்வு ஏற்ப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் விதமாக சங்கரன்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை காலங்களில் திடீரென ஏற்ப்படும் மழை வெள்ளத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புனர்வு நிகழ்ச்சியின் வெள்ள அபாயத்திலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு என செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள எந்தெந்த வகையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதில் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News