சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையம்.
தென்காசி மாவட்டம், ஊத்துமலையை சேர்ந்தவர் கொத்தாளமுத்து மகன் வேலுச்சாமி(60) விவசாயி. வேலுச்சாமி கடந்த 6-ம் தேதி சங்கரன்கோவிலுக்கு வந்து விட்டு ஊர் திரும்பிய போது சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் தவறி விழுந்து காயமடைந்து உள்ளார்.
பின்னர் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் வேலுச்சாமி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.