சிவகிரி அருகே பூச்சி கொல்லி மருந்து குடித்த முதியவர் உயிரிழப்பு

சிவகிரி அருகே பூச்சி கொல்லி மருந்தை குடித்து முதியவர் உயிரிழப்பு.

Update: 2021-10-05 04:15 GMT

சிவகிரி அருகே பூச்சி கொல்லி மருந்தை குடித்து முதியவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினத்தை சேர்ந்தவர் லூர்து (60). இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு மயங்கிய நிலையில் இருந்தார். அவரது உறவினர்கள் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News