குருவி குளத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் பிரச்சனை காரணமாக குருவி குளத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

Update: 2021-12-15 11:15 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி வயது 65. கூலி தொழிலாளி. இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் ஆளில்லா நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குருவிகுளம் போலீஸார் கிருஷ்ணசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்கு போட்ட கிருஷ்ணசாமிக்கு சாந்தி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இரு மகன்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.

Tags:    

Similar News