சங்கரன்கோவிலில் ஆடித்தபசு-கோமதி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை

தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற இந்து முன்னணியிருக்கும் தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2021-07-23 09:49 GMT

சங்கரன்கோவிலில் தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற இந்து முன்னணியிருக்கும் தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு கோமதி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை என மாவட்ட நிர்வாகம் அறிக்கை விடுத்திருந்தது இதனையடுத்து இந்து முன்னணியினர் இன்று ஆலய நுழைவு போராட்டம் அறிவித்து இருந்தது. இதனால் காலை முதல் சங்கரன்கோவில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

தொடந்து தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற இந்து முன்னணியிருக்கும் தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது .மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் தலைமையில் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் உள்ளிட்ட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News