நாளை வாக்கு எண்ணிக்கை: சங்கரன்கோவிலில் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்

நாளை உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி காவல்துறையினர் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

Update: 2021-10-11 15:00 GMT

நாளை உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி காவல்துறையினர் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

நாளை உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி காவல்துறையினர் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அப்பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பள்ளியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள அறையில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய மூன்றடுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி தோல்வியை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் மேலும் சட்டம் ஒழுங்கு பிராச்சனை வராதவாறு அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் வேட்பாளர்களின் கேட்டு கொண்டனர்.

Tags:    

Similar News