திருவேங்கடம் அருகே இருதரப்பினரிடையே மோதல்: 8 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது

திருவேங்கடம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்: 8 பேர் மீது வழக்குபதிவு: 4 பேர் கைது

Update: 2021-10-30 10:00 GMT

திருவேங்கடம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்: 8 பேர் மீது வழக்குபதிவு: 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கீழதிருவேங்கடத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கருப்பசாமி (47) கருப்பசாமி அப்பகுதியில் கோழி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வெங்கடேஷ் (20), மனைவி வள்ளி, தாயார் கருப்பாயியம்மாள். இதே பகுதியை சேர்ந்தவர் சண்முககனி. இவரது மகன்கள் கபில் (22), பொன்கணேஷ் (22) மனைவி ராஜேஸ்வரி, மற்றும் 18 வயது மகள். இந்நிலையில் கபில், வெங்கடேஷிடம் குடிப்பதற்கு அழைத்துள்ளார். இதற்கு வெங்கடேஷ் மறுக்கவே, கபில் வெங்கடேசை தாக்கி செல்போனை பறித்து சென்றுள்ளார்.

இதனை தட்டி கேட்ட வெங்கடேசின் தந்தை கருப்பசாமியை கபில், அவரது சகோதரர் பொன்கணேஷ், தாயார் ராஜேஸ்வரி மற்றும் 18 வயது சகோதரி ஆகியோர் தாக்கியுள்ளனர். அதற்கு கபிலை, கருப்பசாமி, அவரது மகன் வெங்கடேஷ், மனைவி வள்ளி, தாயார் கருப்பாயியம்மாள் ஆகியோர் தாக்கியுள்ளனர். இது குறித்த இருதரப்பு புகாரின்பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்குபதிவு செய்து கபில், பொன்கணேஷ், கருப்பசாமி, வெங்கடேஷ் ஆகியோர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News