திருகார்த்திகையை முன்னிட்டு நாதகிரி பலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தேர் வெள்ளோட்டம்

சங்கரன்கோவில் அருகே திருகார்த்திகையினை முன்னிட்டு நாதகிரி பலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது.

Update: 2021-11-19 05:15 GMT

சங்கரன்கோவில் அருகே திருகார்த்திகையினை முன்னிட்டு அருள்மிகு நாதகிரி பலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கூடலூர் மலையில் உள்ள அருள்மிகு நாதகிரி பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருகார்த்திகை திருவிழாவினை முன்னிட்டு தேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது. இதில் தேரில் வைக்கப்பட்டுள்ள அகஸ்திய முனிவருக்கு,  சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பக்தர்கள் தேரை இழுத்து  மலையினை சுற்றி வந்தனர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News