திருவேங்கடம் அருகே ஓட்டை பிரித்து கொள்ளை அடிக்க முயற்சி: இளைஞர் கைது
திருவேங்கடம் அருகே ஓட்டை பிரித்து கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள சங்கு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் செல்வம்(50). இவரது வீட்டில் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் கௌதம் (22) ஒட்டை பிரித்து திருட முயன்றுள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்குபதிவு செய்து கெளதமை கைது செய்தனர்.