இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்: சீரமைக்க கிராம மக்கள் காேரிக்கை

சங்கரன்கோவில் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையம். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.

Update: 2021-12-16 12:15 GMT

இருமன்குளம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையம்.

சங்கரன்கோவில் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். குழந்தைகள் பயின்று வரும் கட்டிடமானது கட்டி பத்து வருடங்கள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில் கட்டிடத்தின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் அனைத்திலும் கீறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமனாலும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என பலமுறை அதிகாரிகள் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்களின் குற்றச்சாட்டு. எனவே அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News