சங்கரன்கோவில் அருகே ஜீப் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே ஜீப் மோதி அடையாளம் தெரியாதவர் உயிரிழப்பு.

Update: 2021-09-13 05:45 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஒ காலணியை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் கருப்பசாமி (50) இவருக்கு சொந்தமான ஜீப்பில் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் இரவு ராஜபாளையத்திற்கு சென்று சங்கரன்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்பாேது ஜீப் ராஜபாளையம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருக்கும் போது 55 வயது மதிக்கத்தக்க ஆண் ரோட்டை கடந்து உள்ளார். இதில் ஜீப் அவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கரிவலம் வந்தநல்லூர் போலீசார் அடையாளம் தெரியாத நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பதை பற்றி கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News