ஒண்டிவீரன் 250வது நினைவு தினம்: சங்கரன்கோவிலில் எஸ்.பி. ஆய்வு

சங்கரன்கோவிலில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு.

Update: 2021-08-18 12:00 GMT

சங்கரன்கோவிலில் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆய்வு செய்தார்.

சங்கரன்கோவில் அருகே சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 250வது நினைவு தினம் நாளை மறுநாள் அனுசரிக்கப்படுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாவட்ட எல்லையில் சோதனை சாவடிகள் அமைப்பது குறித்தும் மாவட்ட எஸ்பி.கிருஷணராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் இரண்டு டிஎஸ்பிக்கள் உட்பட மூன்று காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விளக்கம் அளித்தனர்.

Tags:    

Similar News