சங்கரன்கோவில் அருகே வெறிநாய் கடித்து 5 பேர் காயம்.

சங்கரன்கோவில் அருகே வெறிநாய் கடித்ததில் 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-06-29 08:31 GMT

சங்கரன்கோவில் அருகே வெறிநாய் கடித்து 5 பேர் காயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பந்தப்புளி கிராமம். இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு இன்று  5 க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தெருக்களில் சுற்றி திரிந்து வருகின்றன. 

இந்த வெறி நாய்களால் கிராம மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று பந்தப்புளியை சேர்ந்த  பிச்சை பாண்டி ( 30 )  , மூக்கம்மாள் (50) , சங்கர் குரு (38 ) , சின்னம்மாள் ( 40)  குருவன் , ஆகியோர்களை வெறி நாய்கள் கடித்து காயப்படுத்தின..

காயமடைந்தவர்கள் ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். வெறி நாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News