சங்கரன்கோவில் அருகே குளத்துக்குள் கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு

சங்கரன்கோவில் அருகே குளத்துக்குள் கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீஸார் விசாரணை

Update: 2021-07-06 12:28 GMT

சங்கரன்கோவில் அருகே குளத்துக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் போலீஸார் விசாரணை கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மலையன்குளம் பகுதியிலுள்ள ஆயக்கலந்தை கண்மாயில் கழுத்து அறுக்கப்பட்டும், தலை மற்றும் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன்  ஆண் சடலம் கிடந்துள்ளது. அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர்கள் குருவிகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற குருவிகுளம்  காவல்துறையினர் சடலத்தை மீட்டனர். இறந்து கிடந்தவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News