சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Update: 2021-03-17 17:55 GMT

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ராஜா, மாவட்ட செயலாளர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ராஜா வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக முப்பிடாதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பின்பு வாகனத்தில் பேரணியாக வட்டாச்சியார் அலுவலகத்திற்கு முன்பாக வந்தடைந்து தேர்தல் நடத்தும் அலுவலர் முருகசெல்வி இடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஒன்றிய செயலாளர் ராஜா உடன் இருந்தனர்.

Tags:    

Similar News