வாகன ஷோரூமில் தீ விபத்து: கோடிக்கணக்கில் தேசம்

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள அருணாச்சல ஆட்டோ ஏஜென்சி இரு சக்கர வாகன ஷோரூமில் மின் கசிவு காரணமாக தீ விபத்து, கோடிக்கணக்கிலான பொருட்கள் தேசம்.

Update: 2021-02-18 05:26 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில், கனகவேல் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகன ஷோரூம் உள்ளது. இதில் இருந்து புகை வருவதாக சாலையில் சென்ற பொது மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் வந்து கடையை திறந்து பார்த்த போது கோடிக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதில் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News