கடையநல்லூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் 400 பேர் மீது வழக்கு

கடையநல்லூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-09-08 10:35 GMT

கடையநல்லூரில் நேற்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் அனுமதியின்றி நடத்திய ஆர்ப்பாட்டம்.

கடந்த வாரம் டெல்லியில் ராபியா என்கிற பெண் போலீசார் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரியும் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு காவல்துறை அனுமதி கொடுக்காத நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம், மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், .மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் , மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துந் நாசர்,மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் மற்றும் மாவட்ட பொருளாளர் ஜலாலுதீன், மாவட்ட துணைத்தலைவர் செய்யது மசூத் சாகிப், மாவட்ட துணை செயலாளர்கள் வல்லம் அஹமத், முஹம்மது, பொட்டல் புதூர் சாதிக், தொண்டரனி பொருப்பாளர் புகாரி, மாணவரணி பொருப்பாளர் அலாவுதீன் மற்றும் 200 பெண்கள் உட்பட 400 பேர்கள் மீது கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்தார்.

Tags:    

Similar News