பிறந்து 28 நாட்களே ஆன குழந்தையுடன் வேட்புமனு தாக்கல் செய்த சித்த மருத்துவர்

கம்பனேரி பஞ்சாயத் தலைவர் பதவிக்கு பிறந்து 28 நாட்களே ஆன குழந்தையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சித்த மருத்துவர்.

Update: 2021-09-22 04:03 GMT

கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி பஞ்சாயத் தலைவர் பதவிக்கு பிறந்து 28 நாட்களே ஆன நிலையில் குழந்தையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சித்த மருத்துவர்.

தென்காசி மாவட்ட கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பனேரி பஞ்சாய்தது தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சித்த மருத்துவர் செல்லமகேஸ்வரி (37) என்பவர் பிறந்து 28 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சம்பவம் அங்குள்ள அதிகாரிகளை நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதே போன்று முதல் முறையாக கம்பனேரி பஞ்சாயத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்த முதல் பெண் வேட்பாளரும் இவரே.

Tags:    

Similar News