சோனியா காந்தி பிறந்த நாள் விழா: கடையநல்லூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கடையநல்லூரில் சோனியா காந்தி 75வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

Update: 2021-12-01 01:40 GMT

கடையநல்லூரில் சோனியா காந்தி 75வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. 

தென்காசிமாவட்டம் கடையநல்லூரில் சோனியா காந்தி 75வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு ரத்ததான முகாம் மரக்கன்று நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

பின்பு அவர் பேசியதாவது அகில இந்திய தலைவர் சோனியா காந்தி அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 9-ஆம் தேதி அம்மையார் அவர்களின் பிறந்தநாள் என்பதால் அனைத்து இடங்களுக்கும் உஷாராக செல்ல முடியாது என்ற காரணத்தினால் இன்று கடையநல்லூரில் அன்னை சோனியா காந்தியின் 75வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகின்றோம்.

எப்போதுமே அகில இந்திய காங்கிரஸ் கட்சிதான் இஸ்லாமியர்களின் பாதுகாவலராக விளங்கியிருக்கிறது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும் என்றும் வருகின்ற நகர் மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் வேட்பாளராக நிற்கின்ற நபர்களை நீங்கள் நிற்கின்ற அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன்,  காங்கிரஸ் தொகுதி தலைவர் எஸ் ஆர் தொகுதி தலைவர் எஸ் ஆர் எஸ் ரமேஷ்இந்நிகழ்ச்சியில் மகி மாரி ரத்ததான கழகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News