கடையநல்லூரில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய கடையநல்லூர் காவல்துறையினர்.

Update: 2021-09-06 17:06 GMT

கடையநல்லூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு காவல்கதுறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய கடையநல்லூர் காவல்துறையினர்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில்,மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு காவல் துறையினர் சென்று போக்சோ சட்டம், குழந்தை திருமணம் மற்றும் கொரோனா குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சார்பு ஆய்வாளர் கனகராஜ், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர்களின் முன்னிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Tags:    

Similar News