கடையநல்லூரில் கல்லூரி மாணவர்களுக்கு தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு

கடையநல்லூரில் உள்ள அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2021-10-01 03:38 GMT

கடையநல்லூரில் உள்ள அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பாக போஷன் அபியான் திட்டத்தின் கீழ் கடையநல்லூரில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பாக மேற்பார்வையாளர்கள் சுப்புலட்சுமி, சிவகாமி, இந்திராகாந்தி மற்றும் கல்லுரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இரத்த சோகை நோய் தடுப்பு முறைகள் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய உணவு கண்காட்சி நடைபெற்றது ஊட்டச்சத்துசத்து நிறைந்த உணவு முறைகள், பாரம்பரிய உணவு முறைகள் பற்றி மாணவ மாணவிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

Tags:    

Similar News