செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக கர்ப்பப் பை அகற்றும் சிகிச்சை
அறுவை சிகிச்சை மருத்துவ குழுவில் இணை இயக்குனர் பிரேமலதா தன்னை இணைத்துக் கொண்டு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டார்;
கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவர்கள் குழு.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் வல்லம் என்ற ஊரை சார்ந்த முருகேஸ்வரி (46) என்ற பெண்மணிக்கு சுமார் இரண்டரை கிலோ எடை கொண்ட கட்டியுடன் கூடிய கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை முதல் முறையாக செங்கோட்டை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்தேறியது.
தென்காசி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா, திடீர் ஆய்வு மேற்கொண்டபோது செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளியின் அவசரம் மற்றும் அவசியத்தை கருத்தில் கொண்டு தனது அனுபவத்தின் மூலமாக, அறுவை சிகிச்சை மருத்துவ குழுவில் இணை இயக்குனர் பிரேமலதா தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவரது தலைமையிலான மருத்துவ குழுவினர் ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனனர். அறுவைச் சிகிச்சைக்குப்பின்னர் நோயாளி நலமுடன் உள்ளார் இது போன்ற சிகிச்சைக்கான வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்