கடையநல்லூரில் வயது முதிர்வின் காரணமாக பெண் யானை உயிரிழப்பு

கடையநல்லூரில் வயது முதிர்வின் காரணமாக பெண் யானை உயிரிழப்பு

Update: 2021-12-25 12:59 GMT

கடையநல்லூரில் வயது முதிர்வின் காரணமாக பெண் யானை இறந்தது. வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் யானையின்‌ உடல்‌ பிரேத பரிசோதனை செய்து சம்பவ இடத்திலேயே அடக்கம்‌ செய்யப்பட்டது.

திருநெல்வேலி வனக்கோட்டம்‌, கடையநல்லூர்‌ வனச்சாகம்‌, கடையநல்லலூர்‌ பிரிவிற்குட்பட்ட சொக்கம்பட்டியைச்‌ சேர்ந்த முகம்மதுபாதுஷா என்பவர்‌ வளர்த்து வந்த லெட்சுமி என்ற பெண் யானை (வயது 53), வயது முதிர்வின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மங்களாபுரத்திற்கு அடுத்த வேலாயுதபுரத்தில்‌ வைத்து இறந்து விட்டது.

இது குறித்து சம்பவ இடத்திற்கு கடையநல்லூர்‌ வனச்சரக அலுவலர்‌ சுரேஷ்‌, கடையநல்லூர்‌ பிரிவு வனவர்‌ முருகேசன்‌, சிறப்பு பணி வனவர்‌ செல்லத்துரை மற்றும்‌ வனக்காப்பாளர்கள்‌ இராமச்சந்திரன்‌, ராஜா, மாதவன்‌, வனக்காவலர்‌ ஆனந்த்‌ மற்றும்‌ வேட்டைத்தடுப்புக்காவலர்கள்‌ ஆகியோர்‌ விரைந்தனர்.

இந்நிலையில் மாவட்ட வன அலுவலர்‌ இரா.முருகன்‌ முன்னிலையில்‌ மற்றும்‌ திருநெல்வேலி தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர்‌ சா.ஷாநவாஸ்கான்‌ மற்றும்‌ திருநெல்வேலி மாவட்ட கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவ ஆராய்ச்சி மையம்‌ துணைத்தலைவர்‌ மரு. முத்துக்கிருஷ்ணன்‌ மற்றும்‌ நோய்‌ பிரிவியல்‌ துறை துணை பேராசிரியர்‌ மரு.குமார்‌, வனக்கால்நடை மருத்துவக்குழு ஆய்வாளர்‌ உ.அர்னால்டு வினோத்‌, வனஉயிர்‌ மற்றும்‌ இயற்கை அறக்கட்டளை தலைவர்‌ ஷேக்‌ உசேன்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ யானையின்‌ உடல்‌ பிரேத பரிசோதனை செய்து சம்பவ இடத்திலேயே அடக்கம்‌ செய்யப்பட்டது.

Tags:    

Similar News