தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த கடையநல்லூர் மலம்பாட்டை தெருவை சேர்ந்த வேலுசாமி என்பவரின் மகன் கோட்டூர்சாமி(36) என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடையநல்லூர் காவல் துறைக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், கோட்டூர்சாமியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் மனோகரன் சமர்பித்தார்.