தமிழ் புத்தாண்டில் விவசாயம் செழிக்க விவசாய உபகரணங்களுக்கு சிறப்பு பூஜை

தோரண மலையில் சுபகிருது புத்தாண்டை முன்னிட்டு விவசாயம் செழிக்க விவசாய உபகரணங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது

Update: 2022-04-14 16:08 GMT

சுபகிருது புத்தாண்டை முன்னிட்டு விவசாயம் செழிக்க விவசாய உபகரணங்களுக்கு சிறப்பு பூஜை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரண மலை பழமையும் பாரம்பரியமும் வாய்ந்தது. அகத்தியர் தேரையர் முதலிய சித்தர்களால் பூஜிக்கப்பட்ட பெருமையும் வாய்ந்ததாகும். மூலிகை வளங்கள் சூழ்ந்த இந்த மலையில் உள்ள முருகனை வழிபட்டால் பல்வேறு நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நெடுங்கால நம்பிக்கையாகும்.

இந்த மலையில் ஒருகாலத்தில் அகஸ்தியரால் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு பல்வேறு சித்த மருத்துவ பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பழமை வாய்ந்த தோரண மலையில் சுபகிருது தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சுபகிருது தமிழ் புத்தாண்டுக்கான பூஜைகள் துவங்கியது.

மேலும் தோரண மலையில் மேலுள்ள மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின்பு மலை உள்ள சுனையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு தோரண மலை அடிவாரத்தில் வைத்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

தென்காசி சிவ பூத கண நாதர் வாத்தியக் குழுவினர் இன்னிசையுடன் பூஜைகள் நடைபெற்றது.

உலகின் உணவிற்கு ஆதார தொழிலான விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் கருவிகள் ஏர்கலப்பை நீர் இறைக்கும் கூனை மற்றும் மரம் அடிக்கும் கருவி மற்றும் மாட்டு வண்டி உள்ளிட்ட வேளாண் கருவிகளை வைத்து பூஜைகள் நடைபெற்றது.சிறந்த விவசாயிகள் மற்றும் சமூக சேவைகளுக்கான தோரண மலையான் விருதும் வழங்கப்பட்டது .

சுமார் 50க்கும் மேற்பட்ட புது திருமண தம்பதிகள் நாடு செழிக்கவும் விவசாயம் மேம்படவும் பொருளாதாரம் செழிக்கவும் தேசத்தில் அமைதி நிலவவும் வேண்டி 50 பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானமும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. சுபகிருது புத்தாண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Tags:    

Similar News