சிவசைலம் ஊராட்சி 3வது வார்டு தேர்தல்: நாளை மறு வாக்குபதிவு

சிவசைலம் ஊராட்சியின் 3வது வார்டுக்கு நாளை மறு வாக்குபதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-08 08:35 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் கடந்த 6ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சிவசைலம் ஊராட்சி பகுதியில் இரண்டாவது வார்டு பகுதிக்கு வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் 3வது வார்டு பகுதிக்கு தேர்தல் நடைபெற்றது.

தேர்தலின்போது இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த சுமார் 45 பேர் மூன்றாவது பகுதியில் வாக்களித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நாளை மறுவாக்கு பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News