அம்பை, கடையம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்: மின்வாரியம் அறிவிப்பு

அம்பை, கடையம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2022-08-05 05:45 GMT

பைல் படம்.

தென்காசி மாவட்டம், அம்பை, கடையம் பகுதிகளில் நாளை (6-ந்தேதி) மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்துக்கு உட்பட்ட ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 6-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் ஆழ்வான்துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், கூனியூர், வெள்ளாங்குளி, புதுக்குடி, ரெங்கசமுத்திரம், அம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இதேபோல், நாளை 6-ந்தேதி ஆவுடையானூர், மணல்காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News