பைக் மீது லாரி மோதியது. சம்பவ இடத்தில் ஒருவர்பலி; மற்றொருவர் படுகாயம்

ஆலங்குளம் அடுத்த புதூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் டிவி மெக்கானிக் சம்பவ இடத்தில் பலியானர். நண்பருக்கு படுகாயம் ஏற்பட்டது.

Update: 2021-04-24 05:45 GMT

கோப்புப்படம்

நெல்லை சிந்துபூந்துறையை சேர்ந்தவர் தமிழ்மன்னன் மகன் முகிலன் துரைநேசன்( 23). டீவி மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி 4 மாதம் ஆகின்றது. இவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்தவர் செல்வன் மகன் சிவநேசபெருமாள்(22).

நேற்று மதியம் முகிலன் துரைநேசன் தனது நண்பன் சிவநேசபெருமாளை அழைத்துக்கொண்டு பாவூர்சத்திரத்தில் ஒரு வீட்டில் பழுதான டிவியை வாங்க பைக்கில் புறப்பட்டு சென்றனர். ஆலங்குளம் அடுத்த புதூர் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது, எதிரே வந்த லாரியும் பைக்கும் எதிர்பாரத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே முகிலன் துரை நேசன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சிவநேசபெருமாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்தும் சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்தவர் சடலத்தை மீட்டு ஆம்புலன்சில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த சிவநேசபெருமாள் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News