கடையம் பகுதியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்

முடிவுற்ற பணிகள் திறந்து வைத்தும் புதிய பணிகளுக்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்

Update: 2023-03-29 13:15 GMT

தர்மபுரம் பகுதியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் 

கடையம் அருகே தர்மபுரமடம் ஊராட்சியில் முடிவுற்ற பணிகள் திறந்து வைத்தும் புதிய பணிகளுக்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே தர்மபுரமடம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ரூ 10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டபட்ட அங்கன்வாடி மையம், ரூ 7.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கபட்ட சிமென்ட் சாலை ஆகியவற்றை திறந்த வைத்தார். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் ரூ 5.30 சமையல் கூடம் அடிக்கல், ரூ7.82 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகாரி மீரா ஷாகிப், சசிகுமார், மோகன், அர்ஜுனன், முருகன், இளங்கோ, அந்தோணி சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் முல்லையப்பன், அந்தோணி தாமஸ், அருள், சதாம் உசேன், ஒன்றிய கவுன்சிலர் ஜஹாங்கீர், முருகன், முத்தையா, மாவட்ட கவுன்சிலர் மைதீன்பீவி கோதர்மைதீன், அவைத்தலைவர் கேபிஎன் சேட், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜஹாங்கீர், சுந்தரி மாரியப்பன், புஷ்பராணி மிக்கேல், சங்கர், ரம்யா ராம்குமார்.

ஊராட்சி தலைவர்கள் ரூஹான் சன்னத் சதாம், முகமது உசேன், மலர்மதி சங்கர பாண்டியன், துணைத்தலைவர் அனுசியா சைலப்பன், மகேஷ் பாண்டியன், ஆழ்வார்குறிச்சி அவைத்தலைவர் அல்லாபிச்சை, பேரூர் துணைச் செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன், செல்வராஜ், கணேசன், ஜோசியர் முருகன் பாலமுருகன், சுபேர், முத்தையா, அழகை முருகன், சுப்பையா, குமார், பாலாஜி, மாயாண்டி, ஜபருல்லா, கனியப்பா, முகம்மது யூசுப், நாராயணன், முத்துராஜன், சேகர், மேசியா சிங், வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ)கலைவாணி, மேற்பார்வையாளர் நிலை 1 சுப்புலட்சுமி, அங்கன்வாடி பணியாளர் ரெஜினா, உதவியாளர் பூபதி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News