சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது

ஆலங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-08 17:12 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனையில் ஈடுபட்ட முத்துக்கிருஷ்ணாபேரி பகுதியை சேர்ந்த தங்கையா என்பவரின் மகன் செல்லும் (40) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News