உள் விளையாட்டு அரங்கம் அமைக்க இலவசமாக இடம் வழங்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ மனு

File A Petition - தென்காசி மாவட்டத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க இலவசமாக இடம் வழங்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Update: 2022-06-30 02:30 GMT

மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் மனு அளித்த முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை.

File A Petition -ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆலடி அருணா அறக்கட்டளை முக்கிய நோக்கங்களில் ஒன்றானது கல்வி, விளையாட்டு துறை வாயிலாக இளைய சமுதாயத்தை முன்னேற்றிட வேண்டும் என்பதே தமிழக முதல்வர் ஒவ்வொரு தொகுதியிலும் உலகத்தரம் வாய்ந்த உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். எனவே ஆலடி அருணா அறக்கட்டளை அரசு உள் விளையாட்டு அரங்கத்தை அமைத்திட ஆலங்குளம் தாலுகா புதுப்பட்டி கிராமம் 1கிராமத்திலுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கிட தயாராக உள்ளது. மேலும் இந்த விளையாட்டரங்கம் சர்வதேச அளவில் உருவாக்கிட ஆலடி அருணா அறக்கட்டளை வாயிலாக உதவிட விரும்புகின்றோம். எனவே ஆலங்குளம் தொகுதியில் விளையாட்டுத்துறையில் மாணவ-மாணவியர்கள் உயர்ந்திட எனது தந்தை ஆலடி அருணா வழியில் பங்களிக்க விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் சார்பாக அவரிடம் கொடுக்கப்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண் உதவித்தொகை கேட்டு கொடுக்கப்பட்டுள்ள மனுக்களையும் கலெக்டரிடம் வழங்கினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News