அரசு பேருந்து- லாரி மோதி விபத்து : ஒருவர் பலி

Update: 2021-04-13 06:30 GMT

கடையம் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்தில் ஒருவர் பலியானார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள எல்லைப்புளி அருகே தென்காசி - கடையம் சென்ற பேருந்தும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த பெண் பயணி முன் பக்கமாக தூக்கிவீசப்பட்டு பலியானார். அரசு பேருந்து ஓட்டுனர் கால் எலும்பு முறிவால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி சென்றதால் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடலை கைப்பற்றி கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்/

Tags:    

Similar News