ஆலங்குளம்: அதிமுக, சுயேட்சை வேட்பு மனு தாக்கல்

Update: 2021-03-16 03:38 GMT

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ் மனோகரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பட்டமுத்து உடனிருந்தார். வேட்பாளர் உடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கேஆர்பி பிரபாகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் வந்திருந்தனர்.

பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநடர் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனுத்தாக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஊராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் மனு தாக்கல் செய்தார் வேட்பாளர் மனு தாக்கல் செய்து உறுதிமொழியையும் ஏற்றார்.

Tags:    

Similar News