வேட்பாளரை மாற்ற அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-03-11 08:00 GMT

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி கீழப்பாவூரில் அதிமுக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று மாலை அதிமுக வெளியிட்டது. இந்நிலையில் இன்று காலை தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியனை மாற்ற கோரி கீழப்பாவூரில் அதிமுக கட்சியினரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளியூர்காரரான மனோஜ் பாண்டியனை மாற்றி விட்டு, ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட உள்ளூர்காரரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மேலும் கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் ஊருக்கே வரவில்லை. எனவே தொகுதிக்கு பரிட்சயப்பட்ட நபரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இல்லையெனில் தீக்குளிக்க போவதாக அக்கட்சியினரே தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News