தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-31 12:15 GMT

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை மழை இருக்காது; மாறாக, வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags:    

Similar News