மாணவர்களே பள்ளியில் இதை கடைபிடிங்க.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளி மாணவ, மாணவியர்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பள்ளிக்கல்விக்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2022-03-23 03:26 GMT

பைல் படம்.

பள்ளி மாணவ, மாணவியர்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

விதிமுறைகள்:

  • காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.
  • மாணவர்கள் லோ-ஹிப் பேண்ட் அணியக் கூடாது.
  • நீளமாக அரைக்கை சட்டையையே மாணவர்கள் அணிய வேண்டும். இறுக்கமான சட்டை அணியக்கூடாது.
  • கருப்பு நிற பக்குள் (Buckle) உடைய பெல்ட்டையே மாணவர்கள் அணிய வேண்டும்.
  • சீரான முறையில் சிகை அலங்காரம் (கட்டிங்) இருத்தல் வேண்டும்.
  • கைகளில் ரப்பர் பேன்ட், செயின், பிரேஸ்லெட் மற்றும் காதுகளில் தோடு உள்ளிட்டவற்றை அணியக்கூடாது.
  • பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் முன் அனுமதி பெற்றுத் தான் விடுமுறை எடுக்க வேண்டும்.
  • மாணவர்கள் தங்கள் பிறந்தநாளின் போதும், பள்ளி சீருடையிலேயே பள்ளிக்கு வர வேண்டும்.
  • மாணவ /மாணவியர் கட்டாயமாக மொபைல் போன், பைக் உள்ளிட்டவற்றை பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது.
  • நகங்களை முறையாக வெட்டி சீராக வைத்திருக்க வேண்டும்.
  • மாணவர்கள் அனைத்து பள்ளி நாட்களிலும், சீருடையில் தான் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.

மேற்காணும் விதிமுறைகளை மாணவ, மாணவிகள் அனைவரும் பின்பற்றி நம் பள்ளிக்கு நற்பெயரை பெற்றுத் தர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News