பாக் ஜலசந்தியில் 60 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 8-ஆம் வகுப்பு மாணவன்

Update: 2022-04-26 06:28 GMT

இந்தியா - இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலும், மீண்டும் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலும் உள்ள 60 கி.மீ. தூரத்தை 19 மணி 45 நிமிடங்களில் நீந்தி கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார், 8-ஆம் வகுப்பு மாணவன் செல்வன் நீ. சினேகன். நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அம்மாணவனின் பெற்றோர் மற்றும் நீச்சல் பயிற்சியாளர் எம். விஜயகுமார் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News