ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மானியத்துடன் பயிற்சி
தோட்டக்கலை, வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகளுக்கு மானியமாக ரூ.1.70 கோடி அறிவிப்பு;
கோப்பு படம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு தோட்டக்கலை, வேளாண்காடுகள் (Agro forestry), நர்சரி செடிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் வழங்க மானியமாக ரூ.1.70 கோடி விடுவிக்க தமிழக அரசு ஆணைபிறப்பித்துள்ளது.
2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் 5000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் விவசாயிகளுக்கு தோட்டக்கலை, வேளாண் காடுகள் (Agro forestry), நர்சரி செடிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் ரூ.1.70 கோடி செலவில் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து 5000 ஆதிதிராவிடர் மற்றும் 2500 பழங்குடியின் விவசாயிகளுக்கு தோட்டக்கலை, வேளாண்காடுகள் (Agro Forestry), நர்சரி செடிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் வழங்கிடும் பொருட்டு ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 2200 விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 800 விவசாயிகள் உள்ளிட்ட, 3000 விவசாயிகள் இத் திட்டத்தில் பயன் பெறுவார்கள்.
ஒரு விவசாயிக்கு, ரூ.2000/- வீதம் 3000 விவசாயிகளுக்கு ரூ.60 இலட்சத்தில் தோட்டக்கலை பயிற்சியும் (2 நாள் பயிற்சி), ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 200 விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 800 விவசாயிகள் உள்ளிட்ட, 1000 விவசாயிகளுக்கு, ஒரு விவசாயிக்கு ரூ.4000/- வீதம் 1000 விவசாயிகளுக்கு ரூ.40 இலட்சத்தில் வனத்துறை பயிற்சியும் (2 நாள் பயிற்சி), மேலும் ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 2600 விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 900 விவசாயிகள் உள்ளிட்ட, 3500 விவசாயிகளுக்கு, ஒரு விவசாயிக்கு, ரூ.2000/- வீதம் 3500 விவசாயிகளுக்கு ரூ.70 இலட்சத்தில் வேளாண் பொறியியல் பயிற்சியும் (3 நாள் பயிற்சி) வழங்க ரூ.1.70 கோடி விடுவிக்க நிர்வாக ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்தகவலை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் நலத்துறை முதன்மைச் டாக்டர் க. மணிவாசன் தெரிவித்துள்ளார்.