செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே அறிவிப்பு!

செகந்திராபாத் - ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை மேலும் இரண்டு மாத காலத்திற்கு நீட்டிப்பதாக தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது

Update: 2024-05-01 04:21 GMT

கோப்புப்படம்

 செகந்திராபாத் - ராமநாதபுரம் இடைய இயக்கப்படும்  சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை, மேலும் இரண்டு மாத காலத்திற்கு நீட்டிப்பதாக  தென் மத்திய ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது‌.

அதன்படி செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) புதன்கிழமைகளில் மே 1, 8, 15, 22, 29, ஜுன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 09.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 11.45 மணிக்கு இராமநாதபுரம் வந்து சேரும்.

மறு மார்க்கமாக ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் (07696) மே 03, 10, 17, 24, 31, ஜுன் 07, 14, 21, 28 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 09.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் வந்து சேரும்.

இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால் குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தென்மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News