ஒமிக்ரானை எளிதில் சமாளிக்க முடியும்

உலகையே அச்சுறுத்திவரும் ஒமிக்ரான் தொற்று பரவலை நாம் எளிதாக சமாளிக்க முடியும் என தொற்று குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன

Update: 2021-12-23 06:04 GMT

ஒமிக்ரான் குறித்து தென் ஆப்ரிக்காவில் இருந்து வரும் செய்திகள் தற்போது வரை நம்பிக்கை தருவதாகவே இருக்கின்றன

ஓமிக்ரான் அலை தொடங்கிய இந்த இரண்டு வாரங்களின் முடிவில் அங்கு தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1.7% பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் அளவு தீவிர பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்

இதுவே இதற்கு முன்பு அங்கு மூன்றாம் அலையைத் தோற்றுவித்த டெல்ட்டாவின் தாக்கத்தில் தொற்றுக்குள்ளானோரில் 19% பேர் மருத்துவமனைகளில் அட்மிட் ஆகினர்.

அதாவது டெல்ட்டாவினால் நூறு பேர் தொற்றடைந்தால் கிட்டத்தட்ட 20 பேர் அட்மிட் ஆகும் சூழ்நிலை இருந்தது. ஆனால் ஓமிக்ரான் மூலம் நூறு பேர் தொற்றடைந்தால் 2 பேருக்கும் குறைவாகவே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 10 மடங்கு தாக்கம் குறைவாக இருக்கிறது

மேலும் டெல்ட்டா தொற்றை ஒப்பிடும் போது முந்தைய ஆல்ஃபா , பீட்டா , டெல்ட்டா அலைகளை விடவும் ஓமிக்ரான் மூலம் சிறார் முதல் முதியவர்கள் வரை பாதிப்பு குறைவாகவே இருப்பதைக் காண முடிகிறது.

தொடர்ந்து நம் நாட்டில் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டோமானால் நிச்சயம் ஓமிக்ரான் மூலம் இங்கு மற்றொரு மூன்றாம் அலை ஏற்பட்டாலும் அதன் தாக்கம் வெகுவாக மட்டுப்பட்டதாகவே இருக்க அதிக வாய்ப்பை உண்டாக்க முடியும்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு

  • இரண்டு டோஸ் தடுப்பூசி 
  • முககவசம்
  • தனிமனித இடைவெளி
  • கைகளை கழுவுதல்

இவற்றை தொடர்வோம்

மூன்றாம் அலையை மட்டுப்படுத்திடுவோம்

இன்னொரு லாக்டவுனை இல்லாமல் செய்வோம்

இன்னுயிர்களைக் காத்திடுவோம்

Tags:    

Similar News