பொங்கல் தொகுப்பு விநியோகம்: தவறு நடந்தால் இந்த எண்ணில் புகார் அளிக்கலாம் -அமைச்சர் அர.சக்ரபாணி

Update: 2022-01-09 01:43 GMT

அமைச்சர் அர.சக்ரபாணி

பொங்கல் சிறப்பு விநியோகத்தின்போது புகார்களுக்கு இடமளிக்காத வகையில், வழங்கப்படும் பொருட்களின் பட்டியலை அங்காடிகளில் வைத்திட வேண்டும். இந்த திட்டத்தில் ஏதேனும் முறைகேடு நடைபெற்றால், தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்ரபாணி கூறியிருந்தார்.

மேலும், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகத்தின்போது ஏதேனும் தவறு அல்லது முறைகேடு நடந்தால் 18005993540 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகார்களை ஆய்வு செய்து, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News