பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து விலைவாசி ஏற்றம்..! மக்கள் அதிர்ச்சி

பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து பல பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2022-03-24 02:38 GMT

உக்ரைன், ரஷ்யா போர் தொடங்கிய பின்பு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது மட்டுமல்லாமல் ஸ் சிலிண்டர் விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை தொடர்ந்து பல்வேறு பொருட்களின் விலை சமீபத்தில் உயர்ந்திருக்கிறது. சாதாரண டீ, காபி, மளிகைப் பொருட்களின் விலையை ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி பண்டல்களின் விலை 300 ரூபாயில் இருந்து 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருளான பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக மதர் டைரி, பராக், அமுல் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி கேஸ் விலைய டெல்லியில் உயர்த்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News