பாம்பன் அருகே கடலில் விட்ட 1.20 மில்லியன் இறால் குஞ்சுகள்: மீன் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை

பிரதம மந்திரி மீன்வளமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க, இறால் குஞ்சுகளை கடலில் விட்டனர்.;

Update: 2022-04-29 03:00 GMT

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் இயற்கையான கடல்வளத்தை புதுப்பிக்கவும், இறால் உற்பத்தியை அதிகரிக்கவும் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம்,(ICAR - CMFRI) பச்சை வரி இறால் குஞ்சுகளை,பொரிப்பகங்களில்வளர்த்து, கடலில் விடும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. இதனால், இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, இப்பகுதியில் நீடித்த இறால் வளத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வழிவகைசெய்யப்படுகிறது. அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புமற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், "தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால்குஞ்சுகளை,பொரிப்பகங்களில்வளர்த்து, கடலில் விடுதல்" என்ற திட்டத்தை மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சிநிலையம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் ரூ.168.948 இலட்சம் மதிப்பீட்டில்,200 மில்லியன் பச்சை வரி இறால்குஞ்சுகளை, தமிழ்நாட்டின் கடல் பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி பகுதிகளில் விடுவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

பிப்ரவரி,2022 முதல்இத்திட்டத்தின் கீழ்3.53 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை கடலில் விட்டதோடு, 27.04.2022 (புதன்கிழமை) அன்று,1.20 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், பாம்பனில் உள்ள பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டன. மேற்சொல்லப்பட்ட இறால் குஞ்சுகள், மண்டபம்மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையதலைவர்,Dr. G. தமிழ்மணி அவர்களால் கடலில் விடப்பட்டன. மீனவர் சங்க தலைவர்கள், உள்ளூர் மீனவர்கள், மண்டபத்திலுள்ள மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இத்தகையமுயற்சிக்குஇந்தியஅரசுமற்றும் ICAR-CMFRI க்குமீனவர்கள்நன்றிதெரிவித்தனர். மேலும், பச்சைவரி இறால் வளத்தை பாதுகாக்க, இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியை, மண்டபம்மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானியான ஜான்சன் ஒருங்கிணைத்தார்.

Tags:    

Similar News