பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு- திருச்சி ரயில் ஈரோடு -திருச்சி இடையே ரத்து

பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு- திருச்சி டவுண் ரயில் ஈரோடு -திருச்சி இடையே பிப்ரவரி 9ம் தேதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

Update: 2024-02-07 15:04 GMT

ஈரோடு – கரூர் இடையே உள்ள பாசூர் – ஊஞ்சலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலத்தை மீண்டும் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி 09.02.2024 அன்று ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும்.

பின்வரும் ரயில் சேவைகள் 09.02.2024 அன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண். 16844 பாலக்காடு டவுன் – -திருச்சிராப்பள்ளி ரயில் 09.02.2024 ஈரோட்டில் குறுகிய காலத்தில் நிறுத்தப்பட்டு ஈரோடு – திருச்சிராப்பள்ளி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். பாலக்காடு டவுனில் இருந்து ஈரோடு வரை மட்டுமே ரயில் இயக்கப்படும். 09.02.2024 அன்று ஈரோட்டில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு செல்லாது.

ரயில் எண்.16846 செங்கோட்டை -ஈரோடு 09.02.2024 இரயில் கரூரில் குறுகிய நேரம் நிறுத்தப்பட்டு கரூர் – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். செங்கோட்டையில் இருந்து கரூர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்; 09.02.2024 அன்று கரூரில் இருந்து ஈரோட்டிற்கு செல்லாது.

பின்வரும் ரயில் சேவை 09.02.2024 அன்று மாற்றியமைக்கப்படும்

ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து 14.00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண்.16845 ஈரோடு- செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 09.02.2024 அன்று 14.45 மணிக்கு (45 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News