தேர்தல் முன்விரோதம் -அதிமுக பிரமுகர் கடையை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர்

Update: 2021-06-06 07:25 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரி கடை செயல்பட்டு வந்தது தற்போது கொரோனா முழு ஊரடங்கால் கடை அடைக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் கையில் பட்டா கத்தியுடன் பேக்கரி கடை வாசலில் நுழைந்த திமுக வாடிப்பட்டி இளைஞரணி செயலாளர் அசோக் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் பட்டாகத்தி சகிதம் வந்து பேக்கரி கடை முன் போடப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும், டேபிள், சேர்களை தூக்கிவீசியும், அந்த வளாகத்திலுள்ள அரசு வங்கி ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி வாசலில் நின்ற இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு டூவிலரில் மின்னல் வேகத்தில் தப்பியுள்ளனர்

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாடிப்பட்டி போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர் அசோக் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்

2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தால் திமுக பிரமுகர் அதிமுகவினருக்கு சொந்தமான கடையை அடித்து நொறுக்கி தப்பியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது பூட்டிய பேக்கரி கடையை பட்டாகத்தியால் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய திமுக பிரமுகரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Similar News